Friday, January 8, 2016

வழித்துணை

கதைக்க கிடந்த கனவுகள்

சொல்லாமல் குவிந்ததேனோ?

உரைக்க வந்த தருணத்தில்

பொல்லாத தயக்கம் ஏனோ?

நான் கோர்த்த பூச்சரம்

சூடாமல் சுமந்ததேனோ?

மலர்கள் வாடிய பின்னும்

உதிரா உணர்வுகள் ஏனோ?

கண்ணோரம் சோகம் உண்டு

சுகம் தந்த கண்ணீர் எங்கே?

விணோடு வெளிச்சம் உண்டு


வழித்துணை நிலவு எங்கே?