Saturday, November 8, 2014

முற்று முடிவிலி

மாருதம் தீண்டயில்
தேகம் உணர்ந்த ஞாபகம்
மேகலை தூரயில்
முத்தம் பதித்த ஞாபகம்
அந்திச்சூரியன் சிவக்கயில் 
நீ நாணம் கொண்ட ஞாபகம்
செங்கமலம் அரும்புகையில்
ஒற்றை புன்னகை ஞாபகம்

விம்பம் சுமக்கும் கடலின் ஆழம்
வெண்ணிலவு அறியுமோ?
நடுநிசியில் தோன்றும் முடிவிலி
அலைகள் தாண்ட இயலுமோ?

என் அருகில் நீயும் இல்லை
உன்னை சேரும் பாதை தென்படவில்லை
உன் நினைவுகள் என் நெஞ்சினிக்க
மருட்சியில் இவ்வேளை உறைக்க

இருளில் நான் கண்டறிந்தேன்
இரு பாதைகளின் கூடல்
போதும், இதில் நிறையும்
என் காலம் கொண்ட தேடல்