Saturday, October 11, 2014

தோழி


என் நெருங்கிய தோழியால் இரண்டு வருடங்களுக்கு முன், எனக்காக எழுதப்பட்ட ஓர் அழகிய கவிதை. அவள் எழுதியதை பொல, இப்பொழுது நாங்கள் திசை மாரி, கடல் கறந்து இருக்கிறோம். அவளின் நினைவுகளும், எங்கள் நட்பின் தூய்மையும் என் நெஞ்சின் ஓரம் சிறகுகள் கொண்டிருக்கின்றன.

முதல் நாள் ஓர் பார்வையில் அறிமுகம்
மறுநாள் இதழோர புன்னகையில் அது நிரந்தரம்.
அன்று நிலவின் நிழலில் நேரம் கழித்தோம், உணர்வுகள் பகிர்ந்தோம்.
இன்று நாலும் வளரும் நண்பர்கள் ஆனோம்!

தோள் கொடுப்பான் தோழனாம்,
அது இலக்கிய பிழை,
தோள் அல்ல, உயிரை கொடுப்பாள் உன் தோழி,
இதிலென்ன மறை?

பாதை எது வரை என்று தெரியாவில்லை
திசைகள் வேறுபடும், அதில் ஆச்சர்யம் இல்லை.
கடல் கடந்தாலும்,
கரை மறந்தாலும்,
என் நினைவுகள் உன்னுடன் என்றும் இருக்கட்டும்.
நம் நட்பும்,
அதன் தூய்மையும்,
சிறகுகள் விரித்து வானில் பறக்கட்டும்!

- சுவாதி

Friday, October 10, 2014

தமிழ் மதி


பூவிழி
அடி மை விழி
உன் நெற்றி பொட்டு ஈர்ப்பது
என் புவி

தேன்மொழி
இதழ் மழை துளி
உன் தயை கொண்டு பூத்ததால்
நான் கவி

எழிலினி
மின்னும் மூக்குத்தி
என் நாளை ஒளிர்க்கும்
விண் ஒளி

முகில்மதி
கூந்தல் கார் வீழ்ச்சி
தாழம்புவாய் பின்னிகொண்டேன்
ஏன் கனி?

குழலினி
பேசும் யாழடி
மடி சாய்ந்து உனை நான்
ரசிப்பேன் சகி

யைங்கிளி
பாதம் பொன் அல்லி
என் நெஞ்செல்லாம் விட்டு சென்றாய்
உன் சுவடி

மென்மதி
நடையில் முழுமதி
உன் கரம் கோர்த்து வருவேன்
முழு வழி