Friday, October 10, 2014

தமிழ் மதி


பூவிழி
அடி மை விழி
உன் நெற்றி பொட்டு ஈர்ப்பது
என் புவி

தேன்மொழி
இதழ் மழை துளி
உன் தயை கொண்டு பூத்ததால்
நான் கவி

எழிலினி
மின்னும் மூக்குத்தி
என் நாளை ஒளிர்க்கும்
விண் ஒளி

முகில்மதி
கூந்தல் கார் வீழ்ச்சி
தாழம்புவாய் பின்னிகொண்டேன்
ஏன் கனி?

குழலினி
பேசும் யாழடி
மடி சாய்ந்து உனை நான்
ரசிப்பேன் சகி

யைங்கிளி
பாதம் பொன் அல்லி
என் நெஞ்செல்லாம் விட்டு சென்றாய்
உன் சுவடி

மென்மதி
நடையில் முழுமதி
உன் கரம் கோர்த்து வருவேன்
முழு வழி



No comments:

Post a Comment